வேலூர், அக் 27 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாணியம்பாடி தாலுகா 14 வது மாநாடு அம்பலூ ரில் நடைபெற்றது. தாலுக்கா குழு உறுப்பி னர்கள் ஆர்.வி.குமார் சி.ராஜா வி.விஜயா தலைமை தாங்கி னார். மூத்த உறுப்பினர் ஏ.சீனி வாசன் கட்சிக்கொடியை ஏற்றி வைத்தார். எம்.பசுபதி அஞ்சலி தீர்மானத்தையும், மாவட்டக்குழு உறுப்பினர் கே.அர்ஜுனன் வரவேற்றுப் பேசினர். மாநாட்டில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி துவக்கவுரையாற்றினார் தாலுகா செயலாளர் ஏ.எம்.இந்துமதி வேலை அறிக்கையையும், ஏ.பிச்சைமுத்து நிதிநிலை அறிக்கையை யும் முன்வைத்தனர். மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி வாழ்த்திப் பேசினார். சிவக்குமார், பிரபா, ஜெகன், ராஜேந்திரன் தீர்மானங்களை முன்மொழிந்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் நிறைவுரை யாற்றினார். நிறைவாக ஆர்.ஹரிசங்கர் நன்றி கூறினார். தாலுகாக்குழு தேர்வு 9 பேர் கொண்ட தாலுகா குழுவிற்கு செயலாளராக ஏ.பிச்சைமுத்து ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டார். தீர்மானங்கள் வாணியம்பாடி ரயில்வே மேம்பால பணியை விரைந்து துவங்க வேண்டும், வாணியம்பாடி அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்த வேண்டும், அம்பலூர்-எக்ளாஸ்புரம் இடையே தரைப்பால பணியை விரைந்து துவங்க வேண்டும்,மதனாஞ்சேரி மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் சாலையை சீரமைத்து தர வேண்டும், கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையில் அரவை துவங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது.