districts

img

நத்தை வேகத்தில் நகரும் யானைகவுனி பாலப் பணி

சென்னை,ஏப்.24- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட யானைகவுனி மேம்பால கட்டுமானப் பணி நத்தை வேகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். யானைக்கவுனி ரயில்வே பாலம் 1933-ல் கட்டப்பட்டது. இந்த பாலம் வலுவிழந்து, காலாவதியானது. தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலை ஈடுகட்டும் வகையில் மேம்பாலத்தின் அகலம் இல்லை. எனவே, பழைய பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட தீர்மானிக்கப் பட்டது. இதையடுத்து  சென்னை மாநக ராட்சியும், தெற்கு ரயில்வேயும் இணைந்து தலா 50 விழுக்காடு  பங்களிப்புடன் பாலம் கட்டிட திட்டமிட்ட னர். இதற்காக 4 ஆண்டுகளுக்கு முன்பு பழைய பாலம் இடிக்கப்பட்டு புதிய மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கியது. இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. கட்டுமானப் பணி தொடங்கிய திலிருந்து, கொரோனா ஊரடங்கு ஒப்பந்ததாரரின் மெத்தனம் போன்ற காரணங்கள் பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. இதனால் வால்டாக்ஸ் ரோடு, ராஜா முத்தையா சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. ராஜா முத்தையா சாலையும் வால்டாக்ஸ் சாலையும் இணைந்தும் இந்த பாலப் பணிகள் முடிவடை யாததால், வாகன ஓட்டிகள் பேசின்பிரிட்ஜ் பாலத்தை அடைய சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியிருக்கிறது. இத னால் எரிபொருள் செலவு, காலவிர யம் ஏற்படுகிறது. மேலும், போக்கு வரத்து நெரிசல்  சிக்கி தவிக்கின்றனர். இதனால் அதிருப்தி அடைந்துள்ளனர்.