districts

கடலூரில் நாளை சீருடை பணியாளர் எழுத்து தேர்வு

கடலூர்,ஆக.24-

      தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமத்தால் நடத்தப்பட உள்ள  நேரடி சார்பு ஆய்வாளர், ஆயுதப்படை, மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை, மற்றும் நிலை அலுவலர், தீயணைப்பு மற்றும் மீட்புப்படை பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு சனிக்கிழமை (ஆக.26) நடைபெற உள்ளது.

     இந்த தேர்வை கடலூர் மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 6800 பேர் எழுத உள்ளனர்.26ம் தேதி காலை பொது எழுத்துத் தேர்வு, காலை 10 மணி முதல் 12.30 மணிவரை நடைபெற உள்ளது. மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் காலை 8.30 மணிக்குள் இருக்க வேண்டும். தமிழ் மொழிக்கான தகுதி தேர்வு மதியம் 3.30 மணிமுதல் 5.10 மணிவரை நடைபெற உள்ளது. மேற்படி தேர்வு எழுதும் தேர்வர்கள் சம்மந்தப்பட்ட தேர்வு மையங்களில் மதியம் 2 மணிக்குள் இருக்க வேண்டும்.

    தேர்வு எழுத வரும் தேர்வர்கள் கண்டிப்பாக தேர்வு நுழைவு சீட்டு கொண்டு வரவேண்டும். பால்பாயிண்ட் பேனா கொண்டுவரவேண்டும். இதை தவிர கைப்பை, கைப்பேசி, புளுடூத் மற்றும்  மின் சாதனங்களை தேர்வு மையங்களுக்கு கொண்டுவரக் கூடாது என மாவட்ட நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.