கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்புனர்வு செய்து கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரியும் உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு வடசென்னை மாவட்டம் சார்பில் மாதவரம் மூலக்கடை சந்திப்பில் மாவட்ட அமைப்பாளர் ஆர்.மணிமேகலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில கன்வீனர் மாலதி சிட்டிபாபு, நிர்வாகிகள் பி.உமா, எம்.சாலட், சிஐடியு மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், ஆர்.லோகநாதன், வி.கமலநாதன், வி.ஆனந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.