districts

img

ஓய்வுபெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை முறையீடு

திருவண்ணாமலை,டிச.28- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் கோரிக்கை முறையீடு இயக்கம் நடத்தப்பட்டது.  திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்க மண்டலத் தலைவர் நாகராஜன், மண்டலச் செயலாளர் எஸ்.லட்சுமி நாராயணன்,  மண்டலப் பொருளாளர் எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் கோரிக்கை முறையீடு அளித்தனர். கடந்த 1998 செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் போக்கு வரத்து கழகத் தொழிலாளர்களுக்கு அமல்படுத்தப்பட்ட ஓய்வூதிய திட்டத்தில் சுமார் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற தொழிலாளர்கள் ஓய்திவூயம் பெற்று வரு கின்றனர்.  ஓய்திவூயர்கள் பல்வேறு பிரச்சினைகள் கோரிக்கைகள் நீண்ட நாட்கள் தீர்வு காணப்படாத உள்ளது. அகவிலைப்படி உயர்வு, மருத்துவ காப்பீடுத் திட்டம், குடும்ப ஓய்திவூயர்களுக்கு மருத்துவ பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் மற்றும் ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் ஓய்வூதிய பிரச்சினைகள், கோரிக்கைகள், ஓய்வுகால பலன்கள் பற்றிய பட்டியல் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.