districts

img

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்க வேண்டும்

சமூக பாதுகாப்புடன் கூடிய வேலையை அடிப்படை உரிமையாக்க வேண்டும், குறைந்தபட்ச ஊதியமாக 26ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆக.1 அன்று சென்னையில் மாநில சிறப்பு மாநாடு நடைபெறுகிறது.  இந்த மாநாட்டை சமூக பாதுகாப்புடன் கூடிய வேலைக்கான இயக்கம் (மெஸ்) நடத்துகிறது. இதனையொட்டி மாநாட்டு வரவேற்புக்குழு சார்பில் வியாழனன்று (ஜூலை 21) சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. வரவேற்புக் குழு தலைவர் க.பீம்ராவ் தலைமையில் நடைபற்ற இந்தக் கூட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன், ‘மெஸ்’ மாநில ஒருங்கிணைப்பாளர் பெ.சண்முகம், மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.குமார், போர்ட்டீஸ் மலர் மருத்துவமனை ஊழியர் சங்க செயல் தலைவர் எம்.அன்பஅரசி, பொதுச்செயலாளர் ஐ.ஆர்.ரவி ஆகியோர் பேசினர்