புதுச்சேரி,ஆக.14-
நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் வேலை பெற்று கொடுத்த விவசாயத் தொழிலாளர் தலைவர்க ளுக்கு புதுச்சேரியில் பாராட்டு விழா நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலம், மண்ணாடி பட்டு கொம்யூன் திருபுவனை தொகுதிக்குட்பட்ட சோரப்பட்டு, விநாயகம் பட்டு கிராமத்தில் கடந்த 4 ஆண்டுகளாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கப்பட வில்லை. இந்த தகவலை அறிந்த அகில இந்திய விவசாய தொழி லாளர்கள் சங்கத்தின் சார்பில் பல கட்ட போராட்டங்கள் நடத்தப் பட்டன.
இதற்கிடையில், வட்டார வளர்ச்சி துறை அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்த னர். இதையடுத்து, சோரப்பட்டு, விநாயகம் பட்டு கிராமத்தில் நூறு நாள் வேலை உறுதி சட்டத் தின்படி வேலையை அமைச்சர் சாய். ஜெ.சரவணன் துவக்கி வைத்தார்.
விநாயகம் பட்டு கிராமத்தில் நடைபெற்ற பாராட்டு விழாவில் அகில இந்திய விவசாய தொழி லாளர் சங்கத்தின் புதுச்சேரி மாநிலச் செயலாளர் த.தமிழ்ச் செல்வன், பொருளாளர் வழக்கறி ஞர் தட்சிணாமூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் சிவசங்கரி மற்றும் நிர்வாகிகள் மாரியப்பன், சாமி கண்ணு, கணபதி ஆகியோருக்கு பயனாளிகள் கதராடை அணிவித்து பாராட்டு தெரிவித்தனர்.