சென்னை,மே 19-
எண்ணூர் பகுதியில் சுகாதார மற்ற குடிநீர் கேன்கள் விற்கப்படு வதாக வந்த புகாரின் அடிப்படை யில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். எண்ணூர் பகுதியில் உள்ள குடிநீர் ஆலையில் ஆய்வு செய்த போது உரிய அனுமதி இல்லா மல் செயல்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து அபராதம் விதித்து, சுகாதாரமற்று விற்ப னைக்கு வைத்துதிருந்த 200 குடிநீர் கேன்களை பறிமுதல் செய்தனர். 19 கடைகளில் ஆய்வு மேற்கொண்டதில் ஐஎஸ்ஐ தரச்சான்று இல்லாத குடிநீர் கேன்கள் விற்பனை செய்த 6 கடைகளுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இதையடுத்து கடைகளில் விற்பனை செய்யப் பட்ட குடிநீர் மாதிரியை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பினர்.