மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை ஏன் ஆதரிக்க வேண்டும்? என்ற பிரசுரத்தை ஓசூரில் வாக்காளர்களுக்கு மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா வழங்கி பிரச்சாரம் செய்தார். திரைப்பட இயக்குநர் கரு.பழநியப்பன், தி.க. தலைவர் வனவேந்தன், சிபிஎம் மாநகர செயலாளர் ஜெயராமன், மாதையன்(சிபிஐ), ராமசந்திரன்(விசிக) , தியாகராஜன் (காங்கிரஸ்), மாமன்ற சுகாதாரக்குழு தலைவர் என்.எஸ்.மாதேஸ்வரன், , இராவணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.