districts

img

77 லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்கள் எங்கே?: சிஐடியு கேள்வி

செங்கல்பட்டு, ஜன.30-  தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த 77 லட்சம் தொழிலாளர்களின் ஆவ ணங்கள் எங்கே என கேட்டு சிஐடியு சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆன்லைன் செயலியில் மற்ற அரசு துறை ஆவணங்கள் பாதுகாப்பாக உள்ள நிலை யில் கட்டுமானம் முறைசாரா தொழிலாளர் நல வாரிய ஆவணங்கள் மட்டும் அழிந்தது எப்படி என உடனடியாக விசாரணை செய்ய வேண்டும், மீண்டும் பதிவேற்ற தொழி லாளிக்கு ஒரு நாள் ஊதிய இழப்பாக  ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும், பதிவு செய்த தொழிலாளியின் நல வாரிய அட்டை முழுமையாக இணை யத்தில் எடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் நல வாரிய பதிவு ஆன்லைன் சர்வர் வேலை செய்யாத போது நேரடியாக மனுக்களை பெற்று பதிவு செய்திட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி சிஐடியு சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் செவ்வாயன்று ( ஜன.30) மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் க.பகத்சிங் தாஸ், மாநிலக் குழு உறுப்பினர் எம்.கலைச் செல்வி, கட்டுமான சங்க மாவட்ட செய லாளர் டி.பாபு, முறைசாரா சங்க மாவட்ட தலைவர் இ.ராமமூர்த்தி, சுமைப்பணி தொழி லாளர் சங்க மாவட்ட தலைவர் பி.மாசிலா மணி, ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்டப் பொருளாளர் எம்.ரமேஷ் உள்ளிட்ட பலர் பேசினார் . பொன்னோரியில் தொழிலாளர் நல வாரிய உதவி ஆணையர் அலுவலகத்தை திங்களன்று பெருந்திரளான தொழி லாளர்கள்  முற்றுகையிட்டு  ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர்.  இதற்கு சிஐடியு மாவட்டத்  தலைவர் கே.விஜயன் தலைமை தாங்கினார்.இதில் சிஐடியு நிர்வாகி கள் ஏ.ஜி.சந்தானம், எஸ்.ஏ.கலாம், ஜி.சூரிய பிரகாஷ், எம் . நாகராஜன், எம்.சந்திர சேகரன், வி.ஆர்.லட்சுமணன், எம்.சி.சீனு, ஜி.வினாயகமூர்த்தி, நரேஷ்குமார், அனீப் உட்பட பலர் கலந்து கொண்டனர்.