கடலூர், பிப்.7- விக்கிரவாண்டி - கும்பகோணம்-தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை பணியை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பண்ருட்டி வட்டக்குழு சார்பில் பிப். 9 அன்று காடாம்புலியூர், கண்டரக்கோட்டையில் சாலை மறியல் நடைபெறு கிறது. இந்த மறியல் போராட்டத்தை விளக்கி மக்கள் சந்திப்பு பிரசார இயக்கம் பண்ருட்டி வட்டம் முழுவதும் நடைபெற்றது. இந்த பிரச்சார பயணத்திற்கு வட்டச் செயலாளர் எஸ்.கே. ஏழுமலை தலைமை தாங்கினார். மாவட்டக் குழு உறுப்பினர் டி.கிருஷ்ணன் துவக்கி வைத்தார். வட்டக் குழு உறுப்பினர்கள் ஆர்.லோகநாதன், டி.ஜெகதீசன், பி.குமரகுரு, விபூர்வசந்தி ரன், கே.முருகன், எம்.ராஜேந்திரன், எஸ்.பகத்சிங் உள்ளிட்ட ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.