districts

img

வேலூரில் புதிய தொழிற்பேட்டைகள் தொகுதி மக்கள் எதிர்பார்ப்பு

நாட்டின் முதல் விடுதலைப் போராட்டத்திற்கு வித்திட்டது  வேலூர் ஆகும். பல  வரலாற்று நிகழ்வுகளுக்கு சாட்சி யாக வேலூர் திகழ்கிறது.  வேலூர்  மக்களவைத் தொகுதி வேலூர், அணைக்கட்டு, கே.வி.குப்பம், குடியாத்தம்,  திருப்பத்தூர் மாவட்டத் தில் உள்ள ஆம்பூர், வாணியம்பாடி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதாகும் இதில் ஆம்பூர், வாணியம்பாடி  பகுதிகளில் தோல் தொழிற்சாலை கள் காலணி உற்பத்தி ஆலைகள் அதிகம் உள்ள பகுதியாகும். குடி யாத்தம் பகுதியில் கைத்தறி நெசவு, தீப்பெட்டி தொழிற்சாலைகள் தென்னை நார் உற்பத்தி தொழிற் சாலைகள் மற்றும் வஜ்ஜிர தொழிற் சாலைகள் உள்ளன. கே.வி.குப்பம் தொகுதி முழுக்க முழுக்க நெல், கரும்பு, கீரைகள் போன்ற விவசாயம் சார்ந்த தொகுதி யாகும்.  அணைக்கட்டு தொகுதியில்  காய்கறிகள், பழங்கள், மல்லி, முல்லை பூக்கள், கொய்யா சாகு படி செய்யப்படுகிறது. வேலூரில்  புகழ் பெற்ற சி.எம்.சி மருத்துவ மனை மற்றும் வேலூர் கோட்டை, தங்க கோவில்  என பல சுற்றுலா தளங்களும் உள்ளன. வேலூர் மக்களவைத்  தொகுதியை ஒட்டி தான் பாலாறும் செல்கிறது. வேலூர் மாநகர பகுதி முழுவதும் வெல்லம், நவதானியம், நெல் அரிசி போன்ற வணிக அங்காடிகள் அதிகம் உள்ளது.  ஆம்பூர், வாணியம்பாடிகளில் பிரியாணி  சிறப்பு மிக்க உணவாகும். ஆந்திர மாநில எல்லையை ஒட்டியுள்ள இந்த மக்களவைத் தொகுதியில் தெலுங்கு பேசும் மக்கள் குறிப்பிட்டத்தக்க எண்ணிக்கையில் உள்ளனர். மேலும் பேர்ணாம்பட்டு, ஆம்பூர், வாணியம்பாடி போன்ற  இடங்களில் கனிசமான எண்ணிக் கையில் இஸ்லாமிய மக்களும் அதற்கு அடுத்தபடியாக  கிறிஸ்தவ மக்களும் உள்ளனர். வேலூர் மக்களவை தொகுதி யில்  மொத்தம் 15 லட்சத்து 9 ஆயிரத்து 970  வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம். கடந்த முறை நடைபெற்ற தேர்த லின் போது வேட்பாளர் ஒருவருக்கு சொந்தமான நபரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டதால் நாட்டிலேயே இந்த மக்களவை தொகுதிக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டு பின்னர் காலதாம தமாக நடத்தப்பட்டது.  இதில் திமுக  கூட்டணியின் சார்பில் கதிர் ஆனந்தும், அதிமுக-பாஜக கூட்டணி யில் அப்போது புதிய நீதிக்கட்சியை சேர்ந்த ஏ.சி.சண்முகம் என்பவரும் போட்டியிட்டனர். இதில் 8 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுகவை சேர்ந்த கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

தொகுதிக்கு து.மு.கதிர் ஆனந்த் செய்தது என்ன

இந்த தொகுதியில் தற்போது மக்களவை உறுப்பினராக உள்ள  கதிர் ஆனந்த் அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். சத்துவாச் சாரி சுரங்கப்பாதை திட்டம், சத்துவாச்சாரி - காங்கேயநல்லூர் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் தற்போது தான் அடிக்கல் நாட்டப் பட்டுள்ளது. போக்குவரத்து நெரி சலை குறைக்க ரயில்வே மேம்பாலம் மேலும் ஒன்று அமைப்பதாக உத்தரவாதம் கொடுத்தார் அது  இப்போது ஒப்பந்தம் கோரப்பட் டுள்ளது. இதே போல் கந்தனேரி, வெட்டுவானம்,பெருமுகை போன்ற  இடங்களில் தேசிய நெடுஞ்சாலை களில் மேம்பாலம் அமைப்பதாக கூறினார் அவைகளுக்கும் டெண்டர்  விடப்பட்டு பணிகள் துவங்கி யுள்ளது.கேவிகுப்பம் முதல் வெ.கோட்டாவை வரை செல்லும்  சாலை விரிவாக்கம் செய்யப்படும் என கூறினார் அதுவும் நிறை வேற்றப்பட்டுள்ளது. வேலூர் மக்களவை உறுப்பின ராக இருக்கும் கதிர் ஆனந்த் பல  கோரிக்கைகளை தொகுதிக்காக வலியுறுத்தி பேசியுள்ளார் என்பதையும் மறுப்பதற்கில்லை. காட்பாடி அரக்கோணம் தொகுதி என்றாலும் அந்த ரயில்வே முனை யத்தை மேம்படுத்த வேண்டும் நிதிகள் ஒதுக்கி இன்னும் பணிகள் துவங்கவில்லை என பல முறை கதிர் ஆனந்த் நாடாளுமன்றத்தில் பேசிய பின்னர் தற்போது பணிகள் துவங்கப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்பார்ப்பு

வேலூர் தொகுதி மக்களின் எதிர்பார்ப்பு வேலூர் மாவட்டம் மூன்றாக பிரித்த பின்னர் எந்த வித மான தொழிற்சாலைகளோ தொழிற்  பேட்டைகளோ இல்லை.  தொழிற் பேட்டைகள், வேலைவாய்ப்பு வேண்டும் இப்பகுதிமக்களின் பெருங்கோரிக்கையாக உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளை வித்த பொருட்களை பாதுகாத்து விற்பனை செய்ய ஆங்காங்கே காய்கனி விற்பனை நிலையங்கள், குளிர்பதன கிடங்குகளும் தேவை. இதே போல் நெல், கம்பு, சோளம் ஆகியவைகளை சேகரித்து உரிய விலைவரும் நேரத்தில் விற்கவும் கிடங்குகள் தேவை. வேலூர் விமான நிலையத்திலிருந்து விமானங்கள் இயக்கப்படும் என அறிவித்து பல ஆண்டுகளாகியும் விமான நிலையம் துவங்கவில்லை விமானங்கள் விரைவில் இயக்கப்பட வேண்டும். வேலூர் கண்டோன்மெண்ட்டி லிருந்து பல ரயில்களை இயக்க வேண்டும். வேலூர் மைய பகுதி யில் அமைந்துள்ள அரசு பெண்ட் லேண்ட் மருத்துவமனை மல்டி  ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை யாக தரம் உயர்த்தப்பட்டாலும் பணிகள் மந்த கதியில் நடந்து வருகிறது. அதனை விரைவுபடுத்தி செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்.  பீடித் தொழிலாளர்கள் அதிகம் கொண்ட தொகுதியாகும். இவர்களுக்கு குடியிருப்புகளை ஒன்றிய அரசு நிதியில் கட்டிதர வேண்டும். இடநெருக்கடியில் இருக்கும் தொழிலாளர் ஈட்டுறுதி  மருத்துவமனையை வேறு இடத்திற்கு மாற்றி அதனை அனைத்து வசதிகள் கொண்ட மருத்துவமனையாக மாற்றப்பட வேண்டும். இந்திய ராணுவத்திற்கு தமிழ்நாட்டில் இருந்து அதிகப்படி யான ராணுவ வீரர்கள், அதிகாரி களை  அனுப்பும் மாவட்டம் என்ப தால் ராணுவ பயிற்சி மையம் ஒன்றை  வேலுரில்  ஏற்படுத்த வேண்டும். கடந்த 1951 ம் ஆண்டு முதல் வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலில் அதிகமுறை திமுக  (6 முறை)  வென்றுள்ளது.   காங்கிரஸ்  5 முறை வென்றுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியை பொறுத்த வரைக்கும் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் இடத்தில் இஸ்லா மியர்கள்  உள்ளனர். - மா.ஞானவேல்