சென்னை துறைமுகம் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியின் நமக்கு நாமே திட்டம் மூலம் பெற்ற நிதி ரூ.2 கோடி மதிப்பீட்டிலும் ஆர்கேநகர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சம் மதிப்பீட்டிலும் நலத்திட்டப்பணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜே.ஜே.எபினேசர், ஆர்.டி.சேகர், மண்டலக் குழு தலைவர் நேதாஜி யு கணேசன், திமுக மேற்கு பகுதி செயலாளர் ஜெபதாஸ் பாண்டியன், கிழக்கு பகுதி செயலாளர் இரா.லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.