districts

img

2850 தொழிலாளர்களை நிரந்தரம் செய்க!

சென்னை, ஆக. 5 - 2 ஆயிரத்து 850 ஒப்பந்த தொழி லாளர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திங்களன்று (ஆக.5) சிந்தாதரிப்பேட்டை குடிநீர் வாரிய தலைமை அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் 3 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை வாரியத்தில் நேரிடை யாக தினக்கூலி, கான்ட்ராக்ட் முறை குடிநீர் இணைப்பு வழங்குதல், கழிவு நீரகற்றுதல், அடைப்புகளை நீக்குதல், ஜெட் ராடிங், சிலிட் ஆட்டோ, சூப்பர் சக்கர் போன்ற பணிகளில் 2 ஆயிரத்து 850 பேருக்கு மேல் வாரியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். 480 நாட்கள் தொடர்ந்து வேலை செய்து வரும் தொழிலாளியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தொழிலாளர் நலச் சட்டம் கூறுகிறது. இதனை வாரியம் அமல்படுத்த மறுக்கிறது. குறிப்பாக, ஆலந்தூர் மண்டலத்தில் பணியாற்றும் 17 பேரை நிரந்தரம் செய்ய காஞ்சிபுரம் தொழி லாளர் உதவி ஆணையர் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யா மல், பணியாணை வழங்க வேண்டும். தொழிலாளர் ஆணையத்தில் உள்ள 671 தொழிலாளர்களின் பணி நிரந்தர வழக்கை விரைந்து முடிப்பதோடு, 2 ஆயிரத்து 850 தொழிலாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புழல் 300 எம்எல்டி மற்றும் வீராணம் சென்னை குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றை வாரியமே ஏற்று நடத்த வேண்டும். 2003லிருந்து குடிநீர் வாரியத்தில் பணி யாற்றும் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த வேண்டும். வாரிய தலைமை அலுவ லகத்தில் உள்ள உணவகத்தை (கேன்டின்) உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் க.பீம்ராவ் தலை மையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் சி.திருவேட்டை, சங்கத்தின் பொதுச்செயலாளர் எம்.பழனி, பொரு ளாளர் இ.ராஜன்,   துணைத்தலைவர் சி.சத்ய நாதன், துணைச்செயலாளர் எஸ்.சீனி வாசன் உள்ளிட்டோர் பேசினர். இதனை யொட்டி வாரிய பொதுமேலாளரை சந்தித்து மனு அளித்து பேசினர். இந்த போராட்டத்தினிடையே வயநாடு நிவாரண நிதி வழங்க தலைவர்கள் கோரினர். இதனையடுத்து தொழிலாளர்கள் 7280 ரூபாயை வழங்கினர்.