districts

img

நீர் விளையாட்டு வளாகம்- பணிகள் தீவிரம்

சிதம்பரம், ஆக. 2- சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பேரூ ராட்சி சார்பில் ரூ 60 லட்சம் மதிப்பில் பரங்கிப்  பேட்டை நீர் விளையாட்டு வளாகம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது . இந்த கட்டுமான பணிகள் கடந்த 2  மாதத்திற்குமேலாக நடைபெற்று வந்த நிலை யில் 80 விழுக்காடு பணிகள் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள  பணிகள் இன்னும் 15தினங்களில் முடிவு பெறும் எனவும் கூறப்படுகிறது. இந்த நீர் விளையாட்டு வளாகத்தில் படகு குழாம், சிறுவர் பூங்கா, மிதவை  பாலம் உள்ளிட்டவைகள் அமைக்கப்படஉள்ளது. சிதம்பரம், பரங்கிப்பேட்டை பகுதியில் உள்ள  பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மட்டுமில்லாமல் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும்  விதமாக படகு குழாமில் சுற்றுலா பயணி களுக்கு தேவையான அனைத்து அடிப் படை வசதிகளும் அமைக்கப்பட்டு வரு கிறது. இதுகுறித்து பரங்கிப்பேட்டை பேரூ ராட்சி செயல் அலுவலர்  சீனிவாசன் கூறுகை யில்,  இது உள்ளூர் மக்கள் இல்லாமல் வெளி மாவட்ட மற்றும் வெளிமாநில பொதுமக்கள் மற்றும் சுற்றுலாபயணிகளை ஈர்க்கும் விதத்தில் அனைத்து அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுவருகிறது.  இதனை இந்த  பகுதியில் உள்ள பொதுமக்கள் நல்ல முறை யில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்இந்த வளாகம் செயல்பாட்டுக்கு வந்தால் இப் பகுதி மேம்படும் என்றார்.

;