திருவள்ளுர், மார்ச்.3- கோடைக்காலம் நெருங்கி வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் சரிந்து வருகிறது. சென்னை நகர மக்க ளின் முக்கிய குடிநீர் ஆதா ரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழ வரம், கண்ணன் கோட்டை ஏரிகள் உள்ளன. தற்போது கோடை காலம் தொடங்கி உள்ள நிலை யில் குடிநீர் ஏரிகளில் நீர் இருப்பு இருப்பு 75 விழுக்காடு சரிந்துள்ளது. 5 ஏரிகளையும் சேர்த்து மொத்தம் 8 ஆயிரத்து 931 மில்லியன் கனஅடிதண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் குடிநீர் ஏரிகளில் தண்ணீர் இருப்பு 10 டி.எம்.சிக்கும் மேல் இருந்தது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் 2 டி.எம்.சி. தண்ணீர் குறை வாக இருப்பது குறிப்பிடத் தக்கது. மேலும் வரும் நாட்களில் வெயிலின் தாக்கம் மேலும் உயரும்போது குடிநீர் தேவை அதிகரித்து ஏரி களில் தண்ணீர் இருப்பு வேகமாக குறையும். ஏற்கெனவே கடலூர் மாவட்டம், வீராணம் ஏரியில் தண்ணீர் முழுவதும் வற்றியதால் சென்னைக்கு குடிநீர் அனுப்புவது நிறுத்தப்பட்டு விட்டது. இதைத்தொடர்ந்து கோடை காலத்தில் சென்னையில் குடிநீர்தட்டுப்பாட்டை சமா ளிக்கும் வகையில் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதி நீரை பெற அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர். புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கனஅடி. இதில் 2253 மி.கனஅடி தண்ணீர் இருப்புள்ளது. சென்னை குடிநீர் தேவைக்காக 159 கனஅடிநீர் வெளியேற்றப் படுகிறது. சோழவரம் ஏரி யில் மொத்த கொள்ளள வான 1081 மி.கனஅடியில் 745 மி.கனஅடி தண்ணீரும், பூண்டி ஏரியில் மொத்த கொள்ளளவான 3231 மி.கனஅடியில் 2404 மி. கனஅடியும், செம்பரம் பாக்கம் ஏரியில் மொத்த கொள்ளளவான 3645மி.கனஅடியில் 3064 மி.கன அடியும், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500மி.கனஅடியில்465 மி.கன அடியும் தண்ணீர் உள்ளது குறிப்பிடத்தக்கது.