districts

img

சாலையில் ஆறாக ஓடும் கழிவு நீர்

ஆம்பூர், ஆக. 3- திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர்  நகராட்சிக்குட்பட்ட ரெட்டி தோப்பு பெத்லே கேம் பகுதிகளில் உள்ள கால்வாய்கள் முறை யாக பராமரிக்கப்படாததால் கால்வாய்களில் குப்பைகள் தேங்கி, கழிவு நீர் சாலைகளில் ஆறாக ஓடுகிறது. இதனால் சாலையில் பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும்  வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அதிலிருந்து துர்நாற்றம் வீசுவதோடு மட்டுமல்லாமல் நோய்த் தொற்று  ஏற்படும் அபாயம் உள்ளது. இதுகுறித்து நக ராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும்  இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என  அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ் தயாநிதி, தாலுகாச்  செயலாளர் அருள்சீனிவாசன் ஆகியோர் கூறு கையில், பொதுமக்கள் நடந்து கூட செல்ல முடியவில்லை. எனவே நகராட்சி நிர்வாகம் உடனடியாக கழிவு நீர் கால்வாய்களை தூர்  வாரி சீரமைக்க வேண்டும். இல்லையென் றால் பொதுமக்களை திரட்டி நகராட்சி அலுவ லகத்தில் முற்றுகையிடுவோம் என எச்ச ரித்தார்.

;