சிதம்பரம்,டிச.14- சிதம்பரம் நகரத்திற்குட்பட்ட அம்பேத்கர் நகர் மற்றும் நேரு நகர் பகுதிகளில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது. இந்த இடம் நீர்வழி ஆக்கிரமிப்பு என்பதால், நீதிமன்ற உத்தரப்படி வீடுகளை காலி செய்துகொடுக்க வேண்டும் வரு வாய்த்துறையினர் நோட்டீஸ் வழங்கினர். தங்களுக்கு மாற்று இடம் வழங்கியதும், தற்போது குடியிருந்து வரும் இடத்தை முழுமையாக காலி செய்து தருகிறோம் என்று அந்த பகுதி கூறியுள்ளனர். ஆனால், வரும் 26 ஆம் தேதிக்குள் காலி செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கட்டாயப்படுத்தி வருகிறார்கள். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மாற்று இடம் வழங்கும் வரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் முத்து தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர் மூசா, நகச் செயலாளர் ராஜா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில செயலாளர் வாஞ்சிநாதன் ஆகியோர் தலைமையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் புதனன்று(டிச.15) காத்திருப்பு போராட்டத்தை துவக்கினர். பின்னர், போராட்டக்குழுவுடன் சிதம்பரம் கோட்டாட்சியர் அமைதி பேச்சு வார்த்தை கூட்டத்தை நடத்தினார். அப்போது, வீடுகளை அகற்ற ஒரு மாதம் அவகாசம் வழங்கினார். மேலும், மாற்று இடம் வழங்குவதற்கு விரைந்து நட வடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி யளித்தார். இதனையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.