கள்ளக்குறிச்சி, ஆக.13- கள்ளக்குறிச்சி மாவட் டம், உளுந்தூர்பேட்டை வட்டத்தில் உள்ள எல வனாசூர்கோட்டை ஏ.புதூர், பரமேஸ்வரி மங்கலம், கூத்தனூர், காட்டுச் செல்லூர், வெள்ளையூர் ஆகிய கிராமங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பூம் பூம் மாட்டுக்காரர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்கள் பிள்ளை களுக்கு இந்து ஆதியன் சாதி சான்று கேட்டு பல ஆண்டு காலமாக போராடி வருகிறார்கள். பல்வேறு தடை கார ணங்களைச் சொல்லி சாதி சான்று வழங்காமல் மாவட்ட நிர்வாகமும் வரு வாய்துறை அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதனால், உயர் கல்விக்கும் மேற்படிக்கும் செல்ல முடியாமல் அவதிப்படு கின்றனர். இதையடுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் தொடர்ச்சியாக போராடி வருகின்றனர். இந்த நிலையில், 2012 ஆம் ஆண்டு திருக்கோவிலூர் கோட்டாட்சியர் பெண்ணை வளம் கிராமத்தில் ஒரு நபருக்கு இந்து ஆதியின் சாதி சான்று வழங்கினார். அதைத் தொடர்ந்து, 2020 ஆம் ஆண்டு நல்லாத்தூர்,முடியனுர், தேவனூர்,ஆகிய கிராமங்க ளில் கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் இந்து ஆதியன் சாதி சான்று வழங்கினார். அதன்பிறகு, ஒருவருக்கும் வழங்க வில்லை. எனவே, இந்து ஆதியன் பூம்பூம் மாட்டுக்காரர் களுக்கு சாதி சான்றிதழ் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் திருக்கோவிலூர் வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. முன்னதாக, புறப்பட்ட ஊர்வலம் கோட்டாட்சியர் அலுவலகத்தை சென்ற டைந்தது. அங்கு நடைபெற்ற பேச்சுவார்த்தையில் திருக்கோவிலூர் கோட்டாட்சியர் கண்ணன், இந்து ஆதியன் சாதி சான்று வழங்குவது குறித்து தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாது”என்றார். இதனால், கோட்டாட்சி யர் அலுவலகம் முன்பு காலவரையற்ற காத்திருப்பு போராட்டத்தை துவக்கி னார். இந்தப் போராட்ட த்தில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.எம். ஜெய்சங்கர், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.ஏழுமலை, மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.வி.ஸ்டாலின் மணி,ஒன்றியச் செயலாளர் வி.ரகுராமன், வட்டச் செயலாளர் திருக் கோவிலூர் எம்.சிவக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.