விழுப்புரம், ஜூன் 3- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே சிறு வாடி ஊராட்சி மன்ற அலுவலத்தில், மாவட்ட ஆட்சியர் மோகன் ஆய்வு செய்தார். அப்போது, தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணியாளர்களுக்கான ஊதியம் நிலுவையின்றி வழங்க வேண்டும். ஊராட்சி செயலாளர் பதி வேடுகளை சரியாக பதிவு செய்து வரவேண்டும். குறிப்பாக எந்த ஊராட்சியிலும் 100 நாள் வேலை பணியாளர்க ளுக்கு ஊதியம் காலதாமதமாக வழங்குவதாக புகார் வந்தால் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.