விழுப்புரம் மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் அடங்கிய இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையமான விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கண்காணிப்பு மையத்திலிருந்து கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருவதை மாவட்ட தேர்தல் அலுவலர் சி.பழனி ஞாயிறன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.