கந்திகுப்பம் தனியார் பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை நடந்த சம்பவத்திற்கு துணை போன பள்ளி தாளாளர், பள்ளி நிர்வாகம், கண்டுகொள்ளாத கல்வித்துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம் அருகில் பர்கூர் வட்டச் செயலாளர் டி.சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் பி.டில்லிபாபு, மாவட்டச் செயலாளர் ஜி.கே.நஞ்சுண்டன், செயற்குழு உறுப்பினர்கள் மகாலிங்கம், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, இடைக்குழு செயலாளர்கள் கிருஷ்ணகிரி பெரியசாமி, போச்சம்பள்ளி சாமு, சிங்காரப்பேட்டை சபாபதி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் லெனின் முருகன், ராஜா, அண்ணாமலை இளவரசன்,சக்தி,மாதர் சங்க மாவட்டச் செயலாளர் ராதா, தலைவர் சரஸ்வதி உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.