districts

img

விம்கோ நகர் - ராமநாதபுரம் ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் துவக்கம்

சென்னை, மார்ச் 8- சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4, 5 வார்டுகளுக்கு இடையே  அமைந்துள்ளது விம்கோ ரயில் நிலையம் மற்றும் விம்கோ மெட்ரோ ரயில் நிலையம்.  விம்கோ நகரில் இருந்து ராமநாதபுரம் ஜோதி நகர் வழியாக மணலி விரைவு சாலை, சடையங்குப்பம் மேம்பாலம் வழியாக மணலி  நியூ டவுன் வரை செல்ல வேண்டும் என்றால் 4 கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை இருந்தது. இதனால் அங்கு சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து ரயில்வே இருப்பு பாதையின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணியை ரயில்வே நிர்வா கம் முடித்து விட்டது. மீத முள்ள பணியை சென்னை  பெருநகர வளர்ச்சி திட்ட  கோட்டம் 3 நெடுஞ்சாலைத் துறை மேற்கொள்கிறது. இந்த சுரங்கப் பாதையின் மொத்த நீளம் 342.455 மீட்டராகும். ராமநாதபுரம் பகுதியில் 150.51 மீட்டர் நீள மும், ரயில்வே பகுதியில் 47.07 மீட்டர் நீளமும் கொண்டது. சுரங்கப் பாதை யின் அகலம் 7.5 மீட்டர், நடை பாதை படிகள் 1.5 மீட்டர்  என மொத்தம் 9 மீட்டர் அகலத்தில் இந்த சுரங்கப் பாதை அமைய உள்ளது.  சுரங்கப்பாதை பணி முடிந்தால் லாரி, பேருந்து கள் இதன் வழியாக செல்ல  முடியும். மேலும் 4 கி.மீ. தூரம் குறையும். இந்நிலையில் ரூ39.01  கோடியில் மீதமுள்ள சுரங் கப்பாதை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடை பெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் 4ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெய ராமன், 5ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் சொக்கலிங்கம், எஸ்.டி.சங்கர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் எஸ்.பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வகுமாரி, பகுதிக்குழு உறுப்பினர் அலமேலு, நெடுஞ்சாலைத் துறை இணை பொறியாளர் சத்தியா, உதவி பொறியாளர் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.