districts

img

சிக்கராயபுரம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

காஞ்சிபுரம், அக். 15 - குன்றத்தூர் ஒன்றி யத்திற்கு உட்பட்ட சிக்க ராயபுரம் பகுதியில் மது பானக் கடை மற்றும் பாதை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழகம் சார்பில் டாஸ்மாக் கடை கள் காஞ்சிபுரம் மாவட் டம் முழுவதும் செயல் பட்டு வருகிறது. சில பிரச்ச னைகளுக்காக பொது  மக்களின் வேண்டு கோளுக்கும் ஏற்ப சில இடங்களில் அரசு மதுபான கடைகள் இடம் மாற்றம் செய்யப்பட்டும் வருகிறது. இந்நிலையில் குன்றத்தூர் ஒன்றியம் சிக்கராயபுரம் சர்வே எண் 96/2A1A2A1 இல் அமைக்க உள்ள மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியை சந்தித்து மனு அளித்துள்ளனர். அந்த மனுவில், சிக்க ராயபுரம் பகுதியில் அமைக்க உள்ள மதுபான கடைக்கு செல்வதற்கு அமைக்கப்பட்டுள்ள பாதை மழை நீர் செல்லும் அகலமான கால்வாய் ஆகும். இந்த கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டு பாதை அமைத்ததை தங்கள் உத்தரவின் மூலம் ஓராண்டுக்கு முன்னால் அகற்றப்பட்டது. அதேபோல் இந்த ஆக்கிரமிப்பு பாதை வழி யாக புதிதாக அமைக்க உள்ள மதுபான கடைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே புதிதாக அமைக்க உள்ள மதுபான கடையை அமைக்காமலும் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யாமல் இருக்க மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த மனுவில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும் இப்பகுதியை ஒட்டி லீலாவதி நகர் விரிவு குடி யிருப்போர் நல சங்கமும் அமைந்துள்ள நிலையில் அவர்களும் அரசு மதுபான கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் மனு அளித்தனர். இது குறித்து சிபிஎம் சிக்க ராயபுரம் கிளை செய லாளர் எம்.மோகன் கூறுகை யில்,இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை திறப்பதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. அந்த உத்தரவினை திரும்ப பெற வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி செப்.30அன்று மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியி டம் மனு அளித்துள்ளோம். அக்டோபர் 2 ஆம் தேதி நடைபெற்ற சிக்கராயபுரம் கிராம சபை கூட்டத்தில் இந்த பகுதியில் அமைய உள்ள மதுபான கடையை அமைக்க கூடாது. என கிராம பொதுமக்கள், அரசி யல் பிரமுகர்கள் அனை வரும் கடும் எதிர்ப்பு தெரி வித்து கிராம சபை கூட்டத்தில்  தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. ஆனா லும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் ஆட்சியர் எடுக்காதது வேதனை அளிக்கிறது இந்நிலையில் அக்டோ பர் 14 திங்களன்று  இதே கோரிக்கைகளை வலி யுறுத்தி  ஊர் பொதுமக்க ளும், சிபிஎம் சார்பிலும் மீண்டும் மனு கொடுத்துள் ளோம் என்றார். மேலும் மதுபானக் கடை அமைய உள்ள இந்த பகுதியில் தான் முத்துக்  குமரன் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பொறியியல், நர்சிங் கல்லூ ரிகளும் தங்கும் விடுதிகள் மற்றும் 300 மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. கல்லூரி மாணவர்களும் வெளியூர்களில் இருந்து தொழிற்சாலைகளில் பணி புரிவோரும் உள்ள இந்த இடத்தில் அரசு மதுபான கடை அமைவதை தடை செய்து ஆட்சியர் இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.