districts

img

கராத்தே போட்டியில் தங்கம்: தக்கோலத்தில் வெற்றி ஊர்வலம்

ராணிப்பேட்டை, மே 6- ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் இயங்கி வரும் ‘நம்ம கராத்தே’ பள்ளி மாணவர்கள், சென்னை யில் நடைபெற்ற மாநில அளவிலான கராத்தே போட்டியில் கலந்து கொண்டனர். இதில் தக்கோலம் காயத்ரி 55 கிலோ எடை பிரிவில், முருங்கை புவனேஷ் குமார் 60 கிலோ எடை பிரிவில், நரிக்குப்பம்  நந்தினி 42 கிலோ எடைப் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தனர். பதக்கம் வென்று சாதனை படைத்து வீடு திரும்பிய மாணவர்களுக்கு உற்சாக வரவேற்பளித்த பேண்ட் வாத்தியங்கள், வாணவேடிக்கை முழங்க வெற்றி ஊர்வலம் நடைபெற்றது. பிறகு, மாண வர்களை பாராட்டி கராத்தே பயிற்சி கூடத்தில் கேக் வெட்டி கொண்டாடினர்.  இந்த வெற்றி கொண்டாட்டத்தில் ஊராட்சி மன்றத் தலைவர்கள் சசி குமார்(முருங்கை), ரேவதி அன்புமணி (நகரிக் குப்பம்), பயிற்சியாளர் தேவ ராசன், கராத்தே பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். மேலும் இம் மாதம் டேராடூனில் நடைபெற இருக்கும் தேசிய அளவி லான போட்டியில் இந்த கராத்தே பள்ளி மாண வர்கள் கலந்து கொள்ள இருப்பது குறிப்பிடத் தக்கது.

;