காஞ்சிபுரம், டிச.13- காஞ்சிபுரம் மாவட்டம், களக்காட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட குருவிமலை கிராமத்தில் ரோட்டு தெரு இருந்தது. அந்த தெரு பல வருடங்களுக்கு முன் காஞ்சி புரத்திலிருந்து உத்திரமேரூருக்குச் செல்லும் மக்கள் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் காஞ்சிபுரத்திலிருந்து உத்திரமேரூருக்குச் சென்றுவர சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றுக்கு குறுக்கே மேம்பாலம் அமைக்கப்பட்டது, புதியதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தை தற்போது வரை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மேம்பாலம் கட்டப்பட்ட பிறகு பழைய ரோட்டுத்தெரு பழுதடைந்து பயன்படுத்த முடியாத நிலை யில் சேரும் சகதியாகவும், குண்டு குழிய மாக மாறியுது. இதனால் முதியோர் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சாலையில் பயணிக்க அச்சப்படுகின்றனர். மேலும் அடிக்கடி விபத்துகளும் நேரிடுகிறது. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அந்த சாலையில் மீன் வளர்க்கும் போராட்டம், மறியல் போராட்டம் என பல்வேறு போராட்டங்களை நடத்தியது. தற்போது அச்சாலைக்கு 2023-24ம் ஆண்டு மாவட்ட அளவில் பராமரிக்கப்படும் தார் சாலைப்பணி திட்டத்தின் கீழ் ரூ. 28.85 லட்சம் ஒதுக்கப்பட்டு அந்த சாலையைப் புதிதாக அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொடர் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என கட்சியின் நிர்வாகிகள் தெரிவித்தனர். இத னால் பகுதி மக்களின் பாராட்டையும் பெற்றுள்ளனர்.