சென்னை, ஆக. 17-
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட வழக்கில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலை வர் வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது
கடந்த 2018ஆம் ஆண்டு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஒன்றிய அரசை வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடியை தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் முற்றுகை போராட்டம் நடை பெற்றது. அப்போது சுங்கச்சாவடி சேதப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சுங்கச்சாவடியை தாக்கி சேதபடுத்தும்படி போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை தூண்டியதாக, வேல்முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வேல்முருகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.