வேலூர், செப். 29 - தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளு நர் சங்கம் வேலூர் மாவட்டக்குழு சார்பில் ஐம்பெரும் விழா மாவட்டத் தலைவர் கோமளீஸ்வரி தலைமையில் நடை பெற்றது. உலக மருந்தாளுநர் தினம், மாவட்ட பொதுக்குழு, பணி ஓய்வு பெற்றவர்க ளுக்கு பாராட்டு விழா, புதிதாக பணியில் சேர்ந்தவர்களுக்கு வரவேற்பு, நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் ரவி, கணேசன், கலைச்செல்வி முன்னிலை வகித்தனர். மாநிலச் செயலாளர் வேந்தன் துவக்க உரையாற்றினார்.மாவட்டச் செய லாளர் ஜீவநாதன், பொருளாளர் ராஜேஷ்குமார், அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளர் சேகர், ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்டச் செயலாளர் பா.வேலு, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்டத் தலை வர் டி.சேகர் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மருந்தாளுநர் சங்க மாநில தலைவர் வே.விஜயகுமாரன் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் மாவட்டத் தலைவராக சண்முகம், செயலாளராக ஜீவநாதன், பொருளாளராக ராஜேஷ்குமார் உள்ளிட்ட 19 பேர் கொண்ட மாவட்ட நிர்வாகிகள் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் விஜய் சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார். பொதுக்குழுவில் காலி பணி யிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், துணை இயக்குனர் மாவட்ட தடுப்பூசி மையத்தில் தலைமை மருந்தாளு நர் பணியிடம் உருவாக்க வேண்டும்.வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருந்து கிடங்கு அலுவலர் பணியிடம் உருவாக்க வேண்டும், மேலும் நோயாளி களின் எண்ணிக்கைக்கேற்ப மருந்தாளு நர் பணியிடம் உருவாக்கிட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.