districts

img

திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி

விஐடி போபால் மற்றும் தமிழியக்கம் சார்பில் வேலூர் மற்றும் சென்னை விஐடி வளாகங்களில் கடந்த அக்டோபரில் 856 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவ - மாணவியர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டி இந்தியா  புக் ஆப் ரெக்கார்ட்சில் இடம் பெற்றுள்ளது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு  சான்றிதழ்  வழங்கும்  விழா விஐடியில் வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடி துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், பல்கலைக்கழக அறங்காவலர் ரமணி சங்கர்,கூடுதல் பதிவாளர் மனோகரன், ஆழி பதிப்பகம் உரிமையாளர் ஆழி.செந்தில்நாதன் ஆகியோர் பங்கேற்றனர்.