districts

சென்னை முக்கிய செய்திகள்

வண்டலூர் பூங்காவில் கட்டணம் உயர்வு

சென்னை, செப். 9- சென்னையில் சுற்றுலா  பயணிகளை கவருவதற் காக பல்வேறு இடங்கள் உள்ளன. கடற்கரை போன்ற இடங்களில் மக்கள்  அதிகளவில் கூடி வருகின்ற னர். அதேபோல் அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரி யல் பூங்கா மிகவும் பிரபல மானதாகும். இந்தியாவின் சிறந்த உயிரியல் பூங்கா என்ற பெருமையை சமீபத் தில் பெற்றது. மொத்தம் 602  ஹெக்டரில் அமைந்துள்ள இந்த பூங்காவில், சுமார்  2 ஆயிரத்து 300 மிருகங்கள் வளர்க்கப்படுகிறது. சென்னையில் உள்ள இந்த பூங்காவில் விரைவில் லயன் சஃபாரி வரப்போ கிறது. இந்த பூங்காவில் கட்டணம் பெரியவர்களுக்கு 90 ரூபாயாகவும், சிறு வர்களுக்கு 50 ரூபாயாகவும் இருந்தது. இந்நிலையில் தற்போது இந்த கட்டணம் பெரியவர்களுக்கு 200 ரூபாய் என இருமடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு சனிக் கிழமை (செப். 9) முதல் அமலுக்கு வந்தது. இந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை  விடுத் துள்ளனர்.

துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை பணிகள் அடுத்த மாதம் தொடங்கும்

நிதின் கட்கரி தகவல்

சென்னை, செப். 9- சென்னை துறைமுகம் முதல் மதுர வாயல் வரை உயர்மட்ட பறக்கும் சாலை  அமைக்கும் திட்டம் கடந்த 2009ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் மன்மோ கன் சிங், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரால் தொடங்கி வைக்கப்பட்டது. கனரக வாகனங்கள் இந்த சாலையை  பயன்படுத்தி விரைவாகப் துறைமுகத் திற்கு சென்று வர இந்த திட்டம் தொடங்கப் பட்டது. இதன்மூலம் சென்னை நகரின் போக்குவரத்து நெரிசல் குறையும் என்று கருதப்பட்டது. இந்நிலையில் 2011ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் இப்பணிகள் கிடப்பில் போடப்பட்டன. கூவம் ஆற்றில் தூண்கள் அமைப்பதால் சுற்றுச்சூழல் பிரச்சினை ஏற்படும் எனக்கூறி ெஜயலலிதா இந்த திட்டத்தை முடக்கினார். பின்னர் 10 ஆண்டு களாக பணிகள் நடைபெறாமல் இருந்தது. கடந்த 2021ஆம் ஆண்டு தி.மு.க. ஆட்சி அமைந்ததை அடுத்து அந்த திட்டம் மீண்டும் புத்துயிர் பெற்றது.  இதையடுத்து உயர்மட்ட சாலை அமைக்க தமிழ்நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுக கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றிக்கிடையே ஒப்பந் தம் கையெழுத்தானது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெண்டர் விடுவதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ஆனால்  பணிகள் மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டதால் தாமதமானது. பின்னர் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம்  டெண்டர் கோரப்பட்டது. இத்திட்டம் முதலில் ரூ.3,204 கோடியில் செயல்படுத்த  முன்மொழியப்பட்டது. ஆனால் உயர்த்தப்பட்ட மேம்பாலம் இரண்டு நிலை களை (டபுள் டெக்கர்) மறுவடிவமைப்பு செய்யப்பட்டதால் பின்னர் ரூ.5,721.33 கோடியாக மாற்றப்பட்டது.  மேம்பால பணிகள் 4 பகுதிகளாக பிரித்து செயல்படுத்தப்படுகிறது. மேம்பாலத்தின் மொத்த நீளம் 20.565 கி.மீ. ஆகும். இந்த சாலைக்கு சுற்றுச்சூழல், ரயில்வே துறை, கடலொர ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவற்றிடம் இருந்து அனுமதி பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை துறைமுகம் முதல் மதுரவாயல் வரையிலான உயர் மட்ட வழித்தடத்தின் ஒரு பகுதி இரட்டை  தளம் அமைக்கும் பணி ஒரு மாதத்தில் தொடங்கப்படும் என்று ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மந்திரி நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டில் அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களை ஆய்வு செய்த ஒன்றிய மந்திரி  கட்கரி, அனைத்து நெடுஞ்சாலைப் பணிகள்  சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், நிலம் கையகப்படுத்தும் பணிகள் நிறைவடைந்த உள்ளதாகவும் தெரிவித்தார்.

குறும்படம் எடுப்பதாக ரூ.15 லட்சம் மோசடி: 2 பேர் கைது

சென்னை, செப். 9- கொடுங்கையூர் கிருஷ்ணமூர்த்தி நகரை  சேர்ந்தவர் பிரசன்னா குமார் (33). வண்ணாரப் பேட்டையில் மிட்டாய் கடை வைத்து, மொத்த வியா பாரம் செய்கிறார். அவரது  நண்பர் மூலம் கடந்த ஜனவரி மாதம் தண்டை யார்பேட்டை சுந்தரம் பிள்ளை நகர் 2ஆவது தெருவை சேர்ந்த சுஜாதா (40) அவரது மகன் ரிஸ்வான் (23) ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். தாய், மகன் இருவரும் பிரசன்னா குமாரிடம் குறும்படம் எடுத்து ஓ.டி.டி.  தளங்களில் வெளியிட்டு நிறைய பணம் சம்பாதிக்க லாம் என்று ஆசை வார்த்தை  கூறி குறும்படம் எடுப்ப தற்கு ரூ. 15 லட்சம் வாங்கி யுள்ளனர். பின்னர் இரு வரும் குறும்படம் எடுக்கா மல் செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்து பிரசன்னா குமார் இதுகுறித்து வண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கிறார்கள்.

வீட்டிற்குள் புகுந்து பணம் கொள்ளை

பொன்னேரி, செப். 9- பொன்னேரியை அடுத்த டிவி புரம் இந்திரா தெருவில் வசிப்பவர் வச்சலா (57). இவர் அமமுக சுற்றுச்சூழல் மாவட்டச்  செயலாளராக உள்ளார். வழக்கம் போல் வெள்ளிக்கிழமை இரவு வீட்டை பூட்டி விட்டு தூங்கியுள்ளார். காலை எழுந்து பார்க் கும் போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் பீரோவில் இருந்த 4,200, மற்றும் 7,500 ரூபாய் மதிப்புள்ள 90 அமெரிக்க டாலர், 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்ட இருப்பது தெரிய வந்தது. இதுகுறித்து வச்சலா பொன்னேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அரசு பள்ளிகளில் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்க ஆட்சியர் அறிவுரை

கிருஷ்ணகிரி, செப்.9- கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பள்ளிக்கல்வித்துறை சார்பாக, அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மார்ச் 2023 தேர்ச்சி குறித்து பகுப்பாய்வு கூட்டம் ஆட்சியர் சரயு தலைமையில் நடந்தது. கூட்டத்தில்  சரயு பேசுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 107 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் தேர்ச்சி விழுக்காடு குறைவாக உள்ள பள்ளிகளை சிறப்பு கவனம் செலுத்தி, வரும் கல்வி ஆண்டில் அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் 100 விழுக்காடு தேர்ச்சி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்”என்றார். தேர்ச்சி விழுக்காடு குறைவாக உள்ள 25 பள்ளி தலைமை ஆசிரியர் வாட்ஸ்ஆப் குழு உருவாக்கி தினந்தோறும் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் செயல்பாடுகள் குறித்து பதிவேற்றம் செய்ய வேண்டும். மெதுவாக கற்கும் மாணவர்களை கண்டறிந்து சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று தேர்ச்சி குறைவாக உள்ள 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொடர்ந்து தேர்வுகள் நடத்த வேண்டும்.  காலை மற்றும் மாலை நேரங்களில் பாட வாரியாக சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும். பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசு பள்ளிகளின் மேம்பாட்டிற்கு சமூக பங்களிப்பு நிதி மற்றும் தனிப்பட்ட பங்களிப்புக்கள் பெற நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி என்ற திட்டம் அனைத்து பள்ளிகளிலும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

கல்குட்டையில் தேங்கிக்கிடக்கும் மழைநீர்:  சென்னை குடிநீருக்கு பயன்படுத்த முடிவு

சென்னை, செப். 9- மாங்காடு அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் ஏராளமான கல் குவாரிகள் உள்ளன. 25க்கும் மேற்பட்ட கல்குட்டையில் சமீபத்தில் பெய்த மழையால் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தாமல் விட்டு விடுவதால் பருவ மழைக் காலங்களில் அதிக அளவில் வரும் தண்ணீர் அந்த பகுதியில் உள்ள கிராமங்களுக்குள் புகுந்து பெரிய அளவில் வெள்ளம் பாதிப்புகளை ஏற்படுத்தும். இதை தவிர்க்கும் வகையில், தேங்கிய மழை நீரை பயன்படுத்தும் வகையில் புதிய திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் உருவாக்கியுள்ளது. இந்த திட்டத்தின் படி கல் குட்டையில் தேங்கி கிடக்கும் மழை நீரை குழாய்கள் மூலம் செம்பரம்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு சென்று சுத்திகரித்து சென்னைக்கு குடிநீர் சப்ளை செய்யப்படும். தற்போது குடிநீர் வாரியம் ஆய்வு செய்ததில் 25 கல்குட்டையில் 0.350 டி.எம்.சி. தண்ணீர் தேங்கி இருப்பது தெரியவந்துள்ளது. இந்த தண்ணீரை செம்பரம்பாக்கத்தில் கொண்டு செல்ல ராட்சத இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் இன்னும் 2 நாளில் முடிந்து விடும். அதன் பிறகு தினசரி 30 மில்லியன் லிட்டர் அளவுக்கு செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படும் என்று குடிநீர் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர். வடகிழக்கு பருவமழை தொடங்கு வதற்கு முன்பு கல் குட்டையில் இருக்கும் தண்ணீரை எடுத்து விட திட்டமிட்டுள்ளனர். இதனால் மழைக்காலங்களில் பெருமளவில் தண்ணீர் கல் குட்டைகளில் தேங்கும். கிராமங்களுக்குள் வெள்ளம் புகுவது தவிர்க்கப்படும் என்று கூறப்படுகிறது.

பணியிட மாறுதல்-கலந்தாய்வு நடத்த வேண்டும் 
அரசு மருத்துவ துறை நிர்வாக ஊழியர்கள் கோரிக்கை

கடலூர், செப்.9- நடப்பாண்டிற்கான அனைத்து நிலை நிர்வாக ஊழியர் பணியிடங்களுக்கான பதவி உயர்வுகள், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு மருத்துவத்துறை நிர்வாக ஊழியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் கடலூரில் நடைபெற்றது மாநிலத் தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் நம்பிராஜன், மாநில பொருளாளர் அசோகன்,  அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் ரவிச்சந்திரன், மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.  கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- அத்தியாவசிய துறையாக இருக்கக்கூடிய மருத்துவத் துறையில் காலியாக உள்ள நிர்வாக ஊழியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். புதிதாக தோற்றுவிக்கப்பட்டுள்ள ஆறு மாவட்டங்களுக்கு நலப்பணிகள் இணை இயக்குநர் அலுவலகம், அதற்குரிய அனைத்து நிர்வாக ஊழியர் பணியிடங்கள் புதிதாக உருவாக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

போக்குவரத்து துறையில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்

அமைச்சர் சிவசங்கர் பேட்டி

கடலூர்,செப்.9- போக்குவரத்து துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். கடலூரில் போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகான தனியார் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள் அதிக அளவில் அரசுப் பள்ளிகளிலும் புதுமைப்பெண் திட்டத்தால் மாணவர்கள் அதிகம் அரசு கல்லூரிகளில் சேர்ந்து வருகின்றனர்.  இதனால், பள்ளி-கல்லூரி மாண வர்களுக்கு தேவைப்படும் அளவுக்கு பேருந்து வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் அறி வுறுத்தியிருக்கிறார். அதற்கான பணிகள் நடந்து வருகிறது. சென்னையில் 100 மின்சார பேருந்து இயக்குவதற்கான நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக விரைவில் ஒப்பந்தப் புள்ளிகள் கோரப் படும். இந்த திட்டம் படிப்படியாக நகரப் பகுதி களுக்கும் விரிவுபடுத்தப்படும். தமிழ்நாட்டில் அரசு விரைவு போக்கு வரத்து கழகத்தில் 685 பணியிடங்களை நிரப்புவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது. மற்ற போக்குவரத்து கழகத்தில் காலி பணி யிடங்கள் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்படும் . இவ்வாறு கூறினார்.