புதுச்சேரி, ஜூலை 12-
வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை வேண்டுமென்றே முடக்க சதி செய்வதாக பாஜக மீது வைத்திலிங்கம் எம்.பி குற்றம் சாட்டியுள்ளார். தெரிவித்துள்ளார்.
ராகுல் காந்திக்கு ஆதரவாகவும், மக்களுக்காக குரல் எழுப்பும் தலைவர்களின் குரல்வளையை நசுக்க முயற்சிக்கும் ஒன்றிய பாஜக ஆட்சியின் நடவடிக்கைகளை கண்டித்து புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சத்தியாகிரக போராட்டம் தவளக்குப்பம் நான்கு முனை சந்திப்பில் நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்பி தலைமை தாங்கினார். முன்னாள் முதல்வர் நாராயணசாமி, வைத்தியநாதன் எம்எல்ஏ, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், முன்னாள் அரசு கொறடா அனந்தராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைத்திலிங்கம்,“நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியின் குரல் ஒலிக்கக் கூடாது என்பதற்காக பாஜக தன்னுடைய பணியை செய்து கொண்டிருக்கிறது”என்றார்.