districts

img

வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா

திருவண்ணாமலை, ஜன. 21- திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி கோட்டை மூலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பில் வாச்சாத்தி வழக்கு வெற்றி விழா பொதுக்கூட்டம் நடை பெற்றது.  தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில பொதுச் செயலாளர் இரா. சரவணன் தலைமை தாங்கினார்,  சிபிஎம் வட்டார செயலாளர் அப்துல் காதர் வரவேற்றார், சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினர் சத்தியா, மாவட்டத் துணைச் செயலாளர் ரேணுகா, மாவட்ட துணைத் தலைவர் பொன்னுசாமி ஆகியோர்  முன்னிலை வகித்தனர். இந்த  நிகழ்வில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பெ. சண்முகம் சிறப்புரை யாற்றினார்.  சிபிஎம் மாவட்டச் செய லாளர் எம். சிவக்குமார், செயற்குழு உறுப்பினர்கள் என். சேகரன், காட்டு நாயக்கன் சங்க மாநில பொதுச் செயலாளர் அய்யனார், வாலிபர் சங்க மாவட்டப் பொருளாளர் எம். சுகுமார், விவசாயிகள் சங்க மாவட்டப் பொரு ளாளர் உதயகுமார், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல குழு மாவட்டத் தலைவர் யாசர் அராபத், சிபிஎம் நகர செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட் டோர் பங்கேற்று உரை யாற்றினர். மாவட்ட துணைச்  செயலாளர் இரா. சுகாநந்தன் நன்றி கூறினார்.