districts

img

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் -2022 சிபிஎம் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பு

சென்னை மாநகராட்சி  148 ஆவது வார்டும் போட்டியிடும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் எஸ்.வெள்ளைச்சாமி ஞாயிறன்று (பிப்.6) முனியப்பன் நகர்,அன்னம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அரசிராஜேந்திரன் (திமுக), சரவணன் (காங்.), ச.லெனின், வி.தாமஸ் (சிபிஎம்)உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

***

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் சென்னை மாநகராட்சி 123-ஆவது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் எம்.சரஸ்வதி ஞாயிறன்று (பிப்.6) பல்லக்கு மாநகர்பகுதியில் வாக்கு சேகரித்தார். திமுக மேற்கு ‘அ’ வட்டச் செயலாளர்மு.ராஜேந்திரன், அவைத்தலைவர் ஜி.முருகன் மற்றும் சுஜி (எ) முருகன்(விசிக), தயாளன் (சிபிஐ), கே.வனஜகுமாரி, எஸ்.குமார், ஐ.ஆர்.ரவி,கே.மாரிமுத்து (சிபிஎம்) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

***

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி 61ஆவது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் வேட்பாளர் ஆர். விஜயா ஞாயிறன்று (பிப்.6) கலைஞர் நகர்பகுதியில் வாக்கு சேகரித்தார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன், ஜி.செந்தில்குமார், தா.கிருஷ்ணா,முருகானந்தம் மற்றும் வேணுகோபால் (காங்.) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

***

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தாம்பரம் மாநகராட்சி 28ஆவது வட்டத்தில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் ஜி.விஜயலட்சுமி ஞாயிறன்று (பிப்.6) குரோம்பேட்டை நியூ காலனி பகுதியில் வாக்கு சேகரித்தார். சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், திமுக நிர்வாகிகள் கே.சுரேஷ், இ.ராமநாதன், டி.குமரன், சிபிஎம் நிர்வாகிகள் எம்.சி.பிரபாகரன், எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

***

;