விழுப்புரம், ஜூலை 1- விழுப்புரம் அருகே கோலியனூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளா கத்தில் பாதுகாக்கப்படாமல் மண் மூட்டைகள் வீணாகி வருகிறது. விழுப்புரம் மாவட்டத் தில் தென்பெண்ணை, வராக நதி, பம்பை ஆறு உள்ளிட்ட பல்வேறு ஆறு களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது மாவட்டத் தில் உள்ள குளங்கள், ஏரி கள் தண்ணீர் நிரம்பி உடைப்புகள் ஏற்படும். அப்போது, அந்தந்த எல்லைகளுக்கு உட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவல கங்கள் மூலம் அந்த அடைப் புகள் சரி செய்யப்படுவது வழக்கம், இதற்கு தற்காலிக மாக மண் மூட்டைகள் வைத்து அடைப்பு சரி செய்ய வேண்டி மண் மூட்டை கள் முன்னெச்சரிக்கையாக சாக்குப் பைகளில் பிடித்து பாதுகாக்கப்பட்டு வரு கின்றன. விழுப்புரம் மாவட்டத் தில், சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையின் போது பாதுகாப்பிற்காக கோலியனூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பிடித்து அடுக்கி வைக்கப் பட்டுள்ள மண் மூட்டைகள் மூடி வைத்து பாதுகாக்கப் படாததால் சாக்குகள் கிழிந்து மண் மூட்டைகள் வீணாகி வருகின்றன. வட்டார வளர்ச்சி அலுவல கம் இந்த மண் மூட்டை களுக்கு மூடாக்கு போட்டு பாதுகாக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.