சென்னை,டிச.15- அண்ணா சாலையையொட்டி 'ரிச்சி தெரு' வில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உரிமம் இன்றி செயல்படு வதாக சென்னை மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது. சென்னை அண்ணா சாலையில் உள்ள ரிச்சி தெரு, எலக்ட்ரிகல் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு பிரசித்தி பெற்றது. இங்குள்ள பெரும்பாலான கடை உரிமையாளர் தொழில் உரிமம், தொழில் வரி ஆகியவை முறையாக செலுத்தாமல் இருப்பதால் மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து 4 ஆயிரம் கடைகளில் உரிமையாளர்களுக்கு முதலில் நோட்டீஸ் அனுப்பி உரிமம் பெற அறி வுறுத்தப்படுகிறது. அதன் பின்னரும் உரிமம் பெறாதவர்கள் கடைகளை பூட்டி சீல் வைக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. கடந்த வாரம் 120 கடைகள் பூட்டி சீல் வைக்கப்பட்டன. இதே போல் மற்ற கடைகளுக்கும் நோட்டீஸ் வழங்கப்படும். மாநகராட்சியிடம் உரிமம் பெறாமல் எந்த தொழிலையும் செய்ய முடி யாது. ஏற்கனவே செய்து வந்தாலும் தற்போது உரிமம் பெற்றாக வேண்டும். ரிச்சி தெருவில் உள்ள சிறிய கடைகள் உரிமம் செலுத்தாததால் மாநகராட்சிக்கு ஆண்டுக்கு பல லட்சம் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. ஆகவே உரிமம் பெறாத வர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும். என மாநகராட்சி நிர்வாகம் தெரி வித்துள்ளது.