மாற்றுத்திறனாளிகளை புறக்கணித்த ஒன்றிய அரசின் பட்ஜெட்டை கண்டித்து பட்ஜெட் நகலை தீயிட்டு கொளுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.வேலு தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செயலாளர் எம்.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கடலூர் முதுநகரில் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.ஆளவந்தார் தலைமையில் பட்ஜெட் நகலைக் கிழித்தெறிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலத் துணைத் தலைவர் வி.ராதாகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, தலைவர் பி.முருகன், பொருளாளர் ஜி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் உரையாற்றினர். திருவண்ணாமலை பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பும், தண்டராம்பட்டு பேருந்து நிலையம் அருகிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர்கள் உரையாற்றினர்.