districts

பாஜக அரசை குறைகூறினால் எடப்பாடி பழனிச்சாமிக்கு கோபம் வருவது ஏன்?

சென்னை, மார்ச் 29 - ஆலந்தூர் தொகுதியில் அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும் என்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கூறினார். இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் மக்களவைத் தொகுதியில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். அவருக்கு வாக்கு கேட்டு ஆலந்தூர் பகுதியில் உதயநிதி ஸ்டாலின் வாக்கு  கேட்டு பேசியதன் சுருக்கம் வருமாறு: இந்தியாவிலேயே அதிகளவு கோவிட் தடுப்பூசிகளை செலுத்திய  மாநிலம் தமிழ்நாடு. மகளிர் கட்டண மில்லா பேருந்து வாயிலாக பெண்க ளுக்கு மாதம் 900 ரூபாய் மிச்சமாகிறது. மாணவர்கள், மாணவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது.  காலை உணவு திட்டம் மூலம் 18 லட்சம் குழந்தைகள் பயனடைகின்றனர். இப்படி தமிழ் நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து பிற மாநிலங்கள் செயல்படுத்துகின்றன. நிதிப் பகிர்வில் ஒன்றிய அரசு  தமிழகத்தை வஞ்சிக்கிறது. சென்னை  உள்ளிட்ட மாவட்டங்கள் வெள்ளத்தால்  பாதிக்கப்பட்டபோது, மக்களுக்கு தமிழக அரசு 6 ஆயிரம் ரூபாய்  நிவார ணம் வழங்கியது. தேசிய பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து  37 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க ஒன்றிய  அரசிடம் கோரினோம். ஆனால், ஒரு பைசா கூட தரவில்லை. 2019ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கு ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட நிதி  ஒதுக்கவில்லை. எப்போதும் கல்லை  காட்டுவதாக எடப்பாடி பழனிச்சாமி  கூறுகிறார். அவர்கள் வைத்ததைதானே  காட்ட முடியும். மோடியை கேள்வி கேட்டால் பழனிச்சாமிக்கு கோவம் வருகிறது. அதற்கு பெயர்தான் கள்ளக்கூட்டு. பாதம் தாங்கி பழனிச்சாமி, தவழ்ந்து  சென்றதை பெருமையாக கூறுகிறார்.  எல்லோருடைய காலில் விழுந்ததோடு,  காலையும் வாரிவிட்டார்.  சிஏஏ உள்ளிட்ட மக்கள் விரோத சட்டங் களை, நீட் தேர்வை ஆதரித்தது அதிமுக. நீட் தேர்வால் 22 குழந்தை கள் உயிரிழந்துள்ளன. பல்லாவரத்தை  சேர்ந்த மாணவர் ஜெகதீசனும், அவரது தந்தையும் அடுத்தடுத்த நாளில் உயிரை மாய்த்துக் கொண்டனர். இது  பாஜகவும், அதிமுகவும் சேர்ந்து செய்த  படுகொலை. இந்தியா அணி ஆட்சிக்கு  வந்ததும் தமிழகத்திற்கு ‘நீட்’ தேர்வுக்கு விலக்கு அளிக்கப்படும். சிலிண்டர் விலையை ரூ.819 ஏற்றிய மோடி, தற்போது ரூ.100 குறைத்துள்ளார். அவர் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரூ.500 உயர்த்துவார்.  இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் 500 ரூபாய்க்கு வழங்கப்படும். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். நெடுஞ்சாலையில் உள்ள டோல்கேட்கள் அகற்றப்படும். ஆலந்தூர் வட்டாட்சியர் அலுவல கம் அருகே மீட்கப்பட்ட நிலத்தில், அரசு  மகளிர் கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும். பரங்கிமலை கண்டோன்மென்டில் கபடி, கைப்பந்து திடல் அமைக்கப்படும். பெல்ட் ஏரியா வில் உள்ளவர்களுக்கு பட்டா வழங்கப்படும். ஆலந்தூர் ரயில்வே கிராசிங்கில் சுரங்கப் பாலம் அமைக்கப்படும். இவற்றை நிறைவேற்ற வேண்டு மெனில் டி.ஆர்.பாலு வெற்றி பெற  வேண்டும். 8 லட்சம் வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற செய்ய வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

கைக்கு போடும் ஓட்டு; மோடி தலையில் போடும் கொட்டு!!

முன்னதாக உதயநிதி ஸ்டாலின் இந்தியா கூட்டணி சார்பில் திருவள்ளூர் (தனி), மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ்  வேட்பாளர் சசிகாந்த் செந்திலை ஆதரித்து வெள்ளியன்று (மார்ச் 29), பொன்னேரியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் பேசினார்.   திருவள்ளூர் மக்களவைத் தொகுதியில் கை சின்னத்திற்கு நீங்கள் போடும் ஒவ்வொரு வாக்கும்,  மோடி தலையில் குட்டப்படுகிற கொட்டாகும். இந்த தொகுதிக்கு காங்கிரஸ் கட்சி நல்ல திறமையான வேட்பாளர் சசிகாந்த் செந்திலை அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கதாகும் என்றார். அனைத்து குக்கிரமங்களுக்கும் அரசு பேருந்துகள் இயக்கப்படும், குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும், தொகுதியில் அடங்கியுள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் இளைஞர்களுக்கும்,  பெண்களுக்கும் 50 விழுக்காடு வேலை வாய்ப்பை ஏற்படுத்தப்படும். மெட்ரோ ரயில் திட்டம் மீஞ்சூர் வரை நீடிக்கப்படும்,  மீனவர் சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும், மீனவர் நலன் காக்க தேசிய நல ஆணையம் அமைக்கப்படும், மீனவர்கள் மாயமாவது தடுக்க தடையற்ற தொலைத்தொடர்பு வசதியை ஏற்படுத்தி தரப்படும் போன்ற வாக்குகள் நிறைவேற்றப்படும் என்றார்.