மின்வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு மாவட்டக் குழு உறுப்பினரும் சிஐடியு மாவட்ட பொருளாளருமான என். பால்ராஜ் தீக்கதிர் வளர்ச்சி நிதியாக ரூ.10 ஆயிரம், நிர்மல் பள்ளி வளர்ச்சி நிதியாக ரூ.10ஆயிரம், கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.10ஆயிரம் வழங்கினார். தீக்கதிர் வளர்ச்சி நிதியை கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.பத்ரியிடம் பால்ராஜ் வழங்கினார் சென்னை பதிப்பு பொறுப்பாசிரியர் விஜயகுமார், முன்னாள் பொது மேலாளர் சி.கல்யாணசுந்தரம், கட்சியின் செங்கல்பட்டு மாவட்டச் செயலாளர் ப.சு பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் தீக்கதிர் முகவர்கள் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.