districts

img

புகையிலை பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது

 விழுப்புரம்,செப்.10- விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் காவல் நிலைய  எல்லைக்குட்பட்ட நடுக்குப்பம் பகுதியில் தமிழ்நாடு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக மரக்காணம் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது மதுராந்தகம் ஈஸ்வரன் கோவில் தெருவை சேர்ந்த பழனி (வயது 40), தண்டலம் அப்துல் கலாம் தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி (38) ஆகிய இருவரும் மினி லாரியில் குட்கா, கூல் லிப் உள்ளிட்ட 708 கிலோ போதைப் புகையிலை பொருட்களை கடத்தி சென்றதை கண்டறிந்து, உடனடியாக 2 வாலிபர்களையும் கைது செய்தனர்,  கடத்தி வரபட்ட ரூ.7 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள், கடத்த பயன்படுத்தப்பட்ட மினி லாரியை பறிமுதல் செய்தனர்.