districts

ஆம்பூர் அருகே மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

ஆம்பூர், ஜூன் 4- ஆம்பூர் அருகே இருசக்கர வாக னத்தில் கர்நாடக மாநில மது வகை களை கடத்தி வந்த சட்டக்கல்லூரி மாணவர் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடச்சேரி கூட்டு ரோட்டில் வியாழக்கிழமை (ஜூன் 4) இரவு உம ராபாத் உதவி ஆய்வாளர் சரத்குமார்  தலைமையில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வேக மாக வந்த இரு சக்கர வாகனத்தை காவல் துறையினர் மடக்கினர். ஆனால் இருசக்கர வாகனம் நிற்கா மல் சென்றது. இதையடுத்து காவல் துறையினர் அந்த வாகனத்தை விரட்டிச் சென்று பிடித்தனர். வாகனத்தில் வந்தவர்களிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி னர். விசாரணையில் மிட்டாளம் ஊராட்சி பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் தாமரைக்கனி (28),  கீழ் மிட்டாளம் கோயில் தெருவை சேர்ந்த விஜய் (25) என்பது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கர்நாடக மாநி லத்தில் இருந்து மது பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரை யும் கைது செய்து, மது பாட்டில்களை யும், இருசக்கர வாகனத்தையும் பறி முதல் செய்தனர்.

;