districts

img

போக்குவரத்து ஊழியர்கள் நன்கொடை...

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தென்சென்னை மாவட்ட போக்குவரத்து அரங்க பேரவைக் கூட்டம் வெள்ளியன்று (ஏப்.28) கிண்டியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், மாநிலச் செயற்குழு உறுப்பினர் க.கனகராஜியிடம், இடைக்குழு செயலாளர் ஜி.செந்தில்குமார் கட்சி நிதியாக ஒரு லட்சம் ரூபாயை வழங்கினார். மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.அசோகன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்டச்செயலாளர் ஆர்.வேல்முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.