districts

img

விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்லும்

திருவள்ளூர், செப் 11- மாணவர்களுக்கு நெரிசல் நேரங்களில் விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல  போக்குவரத்துத்துறை அதிகாரிகள் உறுதியளித்ததால்  இந்திய மாணவர் சங்கம் சார்பில் திங்களன்று (செப்.11) நடைபெற இருந்த மறியல் தற்காலி கமாக கைவிடப்பட்டது. திருவள்ளூர் அருகில் உள்ள விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து பேரத்தூர், விஷ்ணுவாக்கம் உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், 10 கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள திரு வள்ளூர் நகருக்கு சென்று தான் கல்வி  பயிலவேண்டிய நிலை உள்ளது. இந்நிலை திருவள்ளூர் வழித்தடத்தில் இயங்கும் மாநகர பேருந்துகள், விழுப்புரம் கோட்ட பேருந்துகள், விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்துகள் நிறுத்தப்படுவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதனால் பள்ளிக்கு கால தாமதமாக செல்ல வேண்டிய சூழல் ஏற்படுகிறது. தினம் இந்த பிரச்சினை நிலவுவதால் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளா கின்றனர். இந்த சூழலில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பள்ளிக்கு சென்றுவர ஏதுவாக காலை, மாலை நேரங்களில் விஷ்ணுவாக்கம் பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும், கூடுதல் பேருந்து களை இயக்க வேண்டும், வேகத் தடை அமைக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலி யுறுத்தி திங்களன்று (செப் -11) விஷ்ணுவாக்கத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட போவதாக அறிவித்தனர். இதனை தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. மாநகர போக்குவரத்து கழகத்தின் பாடியநல்லூர் பணிமனை மற்றும் மாதவரம் பணிமனை கிளை மேலாளர்கள்,  வெங்கல் காவல் ஆய்வாளர் வெங்கடேசன் மூலமாக பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது பேச்சு வார்த்தையின் போது,  மாண வர்கள் செல்லும் காலை, மாலை நேரங்களில் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும்,  சரியான நேரத்தில் இயக்கப்படும். மேலும் பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் ஓட்டுநர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரி உறுதியளித்தார். இதனை தொடர்ந்து மறியல் தற்காலிகமாக கைவிடப்பட்டது. பேச்சுவார்தையில் இந்திய மாண வர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆ.டிக்சன், மாவட்ட துணைச் செய லாளர் கா.ஆர்த்தி, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் சே.கலையரசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.