districts

img

தாராபூர் டவர் அருகே போக்குவரத்து மாற்றம்: வாகன ஓட்டிகள் அவதி

சென்னை,மார்ச் 13- சென்னை அண்ணா சாலை தாராப்பூர் டவர் அருகே போக்குவரத்து ஒரு வழிப் பாதையை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிவருகின்றனர். சென்னை அண்ணா சாலையின் வாலாஜா சாலை சந்திப்பில் இருந்து வாகனங்கள் வலதுபுறம் திரும்புவதற்கு தடை விதித்து சென்னை மாநகர போக்கு வரத்து  போலீசார், வாகனங்கள் டேம்ஸ் சாலை மற்றும் பிளாக்கர்ஸ் சாலை வழியாக அண்ணா சாலைக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது. இந்த புதிய ஒருவழிப்பாதை முறை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை களில் தற்காலிகமாக அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த மாற்றம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் வாலாஜா சாலையில் இருந்து பல்லவன் சாலைக்கு செல்லும் வாகனங்கள், வாலாஜா சாலை அண்ணா சாலை போக்குவரத்து சந்திப்பில் உள்ள அண்ணா சாலையின் இடதுபுறம் திருப்பிவிடப்படுகிறது. தாராபூர் டவர் சென்று அண்ணா சாலை பல்லவன் சாலைக்கு செல்ல வேண்டும். வாலாஜா சாலையில் இருந்து பல்லவன் சாலைக்கு செல்லும் இருசக்கர வாகனங்கள் பாட்டா ஷோரூமுக்கு எதிரே ‘யு திருப்பம்’ எடுக்க அனுமதிக்கப்படுகிறது. தாராப்பூர் டவரில் இருந்து பாட்டா ஷோரூம் நோக்கி செல்லும் சாலை ஒரு வழிப்பாதையாக மாறியுள்ளது. பல்லவன் சாலைக்கு செல்லும் வாகனங்கள், டேம்ஸ் சாலை மற்றும் பிளாக்கர்ஸ் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு, பின் அண்ணா சாலைக்குள் நுழைந்த பிறகு, பல்லவன் சாலைக்கு செல்கிறது. இதனால் அண்ணா சாலை வாலாஜா சாலை மற்றும் டேம்ஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் வாகன ஓட்டிகள் சுற்றி செல்ல வேண்டி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழைய முறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.