சென்னை, ஏப். 8- சென்னையில் பிரதமர் வருகையையொட்டி செவ்வா யன்று (ஏப்.9) போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஏப். 9) மாலை 6 மணிக்கு தி.நகர், தியாகராய சாலையில் நடைபெறும் சாலை அணிவகுப்பு (ரோட்ஷோ) கண்காட்சியில் கலந்து கொள்வதற்காக சென்னை வருகிறார். இதனால் சாலை அணிவகுப்பு நடக்கும் பகுதி மற்றும் அதைச் சுற்றி இருக்கும் பகுதிகளான ஜிஎஸ்டி சாலை, மவுண்ட் பூந்தமல்லி சாலை, சிபெட் சந்திப்பு, 100 அடி சாலை, அண்ணாசாலை, எஸ்.வி.படேல், காந்தி மண்டபம் சாலை மற்றும் தி.நகர் ஆகிய இடங்களில் மதியம் 3 மணி முதல் இரவு 8 மணி வரை லேசான போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த சாலைகளை தவிர்த்து மாற்று வழியில் செல்ல திட்டமிடு மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் பிற்பகல் 3 மணி முதல், தியாகராய சாலையில் வாகனங்கள் செல்ல தடை செய்யப்பட்ட பகுதியாகவும், தியாகராய சாலை முழுவதும், வெங்கட நாராயணா சாலை, ஜி.என்.செட்டி சாலை மற்றும் வடக்கு போக் சாலை ஆகியவை சாலை அணிவகுப்பு முடியும் வரை வாகன நிறுத்துவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கீழே குறிப்பிடப்பட்டுள்ள சாலைகளில் வணிக வாகனங்கள் மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை இடையிடையே தடை செய்யப்படும். பல்லாவரம் ஜிஎஸ்டி சாலையில் இருந்து கத்திப்பாரா நோக்கி செல்லும் வாகனங்கள். மவுண்ட் பூந்தமல்லி சாலையில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள். சிப்பெட்டில் இருந்து அண்ணா சாலை நோக்கி செல்லும் வாகனங்கள். வடபழனியில் இருந்து தி.நகர் வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வாகனங்கள். கத்திப்பாராவில் இருந்து சைதாப்பேட்டைக்கு செல்லும் வாகனங்கள். சிபிடி-யில் இருந்து விமான நிலையம் மற்றும் காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள். டைடல் பார்க்கில் இருந்து காந்தி மண்டபம் நோக்கி செல்லும் வாகனங்கள். அண்ணா சிலையில் இருந்து மவுண்ட் ரோடு நோக்கி வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்படும். எனவே வாகன ஓட்டிகள் தங்கள்