districts

ரயில் மோதி வியாபாரி பலி

ஜோலார்பேட்டை, மே 17-

   திருப்பத்தூர் மாவட்டம், பழைய வாணியம்பாடியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (59). இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். இந்நிலையில் இவர் புதன்கிழமை  காலை கோவிந்தாபுரம் அருகே உள்ள தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

   அப்போது அந்த வழியாக வந்த ரயில் இவர் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு பலத்த காய மடைந்தார். அந்த வழியாகச் சென்றவர்கள் கோவிந்த ராஜை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூருக்கு அழைத்துச் சென்றனர். அப்போது வழியிலேயே கோவிந்தராஜ் இறந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.