தமிழ்நாடு மின்சார வாரியம் மேற்கொண்டுள்ள முத்தரப்பு ஒப்பந்தத்தை திரும்ப பெறக்கோரி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் காட்பாடி தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மண்டல செயலாளர் எம்.கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வு பெற்றோர் சங்க முன்னாள் மாநில செயலாளர் என் பிச்சி மணி மின்ன ஊழியர் மத்திய அமைப்பு செயலாளர் ஜெகன் பொருளாளர் சின்னதுரை ஆகியோர் இதில் கலந்து கொண்டு பேசினர்.