districts

img

டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி கவுன்சிலர் கையெழுத்து இயக்கம்

சென்னை, மே 27 -

    பள்ளிகளுக்கு அருகா மையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலி யுறுத்தி சனிக்கிழமையன்று (மே 27) மாநகராட்சி கவுன்சி லர் கையெழுத்து இயக்கம் நடத்தினார்.

   சென்னை மாநகராட்சி 123வது வட்டம், தேனாம் பேட்டை திருவள்ளுவர் சாலையில் மாநகராட்சி துவக்கப்பள்ளி, மேல் நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு அருகே 200 மீட்டர் தொலைவில் டாஸ்மாக் கடை (எண் 894) உள்ளது. குடியிருப்பு களுக்கு இடையே, மார்க் கெட்டில் அமைந்துள்ள இந்த கடையால் சாலையில் கடும் போக்குவரத்து நெரி சல் ஏற்படுகிறது. அவ்வப் போது சட்டம் ஒழுங்கு பிரச்ச னையும் ஏற்படுகிறது.

   இவற்றின் காரணமாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். குடியிருப்புவாசிகளும் பெரும் சிரமத்திற்கு உள்ளா கின்றனர். எனவே, இந்த கடையை அகற்ற வலி யுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஆழ்வார் பேட்டை கிளை சார்பில் இந்த கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

  123 வார்டு கவுன்சிலர் எம்.சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த இயக்கத்தை மயிலாப்பூர் பகுதிச் செயலாளர் ஐ.ஆர்.ரவி தொடங்கி வைத்தார். பகுதிக்குழு உறுப்பினர் இமானுவேல், கிளைச்செயலாளர் நித்தி யானந்தம், ஆட்டோ சங்க பகுதிச் செயலாளர் அரி நாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.