districts

img

சுற்றுச்சூழலை பாதுகாக்க பசுமை கருத்தரங்கு

சென்னை, ஜூலை 8 -  

    சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பான ஊக்குவித்தல் நிகழ்ச்சி சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.  

    இதில் அரசுசாரா சுற்றுச்சூழல் தொண்டு நிறுவனமான எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் அமைப்பின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர் . பசுமைக்கான முன்முயற்சிகள் குறித்து அனைவரிடமும் எடுத்துக் கூறவும்,  பசுமை செயல்பாடுகளை மேம்படுத்தவும், பசுமையான எதிர்காலத்தை உருவாக்குவதில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் என ஏராளமான பேர் கலந்து கொண்டனர். சிறிய, ஒருங்கிணைந்த முயற்சிகள் எப்படி சுற்றுச்சூழலில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தும், பசுமை முயற்சிகளில் ஈடுபடும் தனிநபர்கள் மற்றும் சமூகத்தின் எழுச்சியூட்டும் கதைகள் குறித்தும், பல்வேறு உதாரணங்களுடன் விளக்கமாகப் பேசினர்.