districts

img

சாலை மையத்தடுப்புகளை பரமாரிக்க தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு

சென்னை, மார்ச் 27 - சென்னை மாநகராட்சிக்குட்பட்ட சாலை களின் மையத்தடுப்புகளை பராமரிக்க தனியார் நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது. சென்னை மாநகராட்சி 387 கி.மீ. நீளமுள்ள 471 பேருந்து சாலைகளை பராமரிக்கிறது. சாலையின் மையத்தடுப்புகள், போக்கு வரத்து தீவுத்திட்டு பூங்காக்களை பரா மரிக்கும் வகையில் சிங்காரச் சென்னை 2.0 திட்டம் மற்றும் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் மரங்கள், செடிகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. ஒரு சில சாலை மையத்தடுப்புகளில் மாநக ராட்சியின் பண்ணையிலிருந்து செடிகள் கொண்டு வரப்பட்டு நடப்பட்டுள்ளன. திடக்கழிவு மேலாண்மை துறையின் மூலம் குப்பைகளிலிருந்து உற்பத்தி செய்யப்படும்  இயற்கை உரம் இந்த செடிகளுக்கு இடப்படுகிறது. பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் இருந்து பயோ மைனிங் முறையில் பிரித்து எடுக்கப்பட்ட பிறகு பெறப்படும் மண் சாலை மையத் தடுப்புகளில் நிரப்பப்படுகின்றன. சாலை மையத்தடுப்புகளை பசுமை யாக பரமாரிக்க தனியார், தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பை பெறவும், நமக்கு நாமே திட்டத்தில் இந்த பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. மையத் தடுப்புகளில் அழகுபடுத்தி, பசுமை யாக்கும் பணிகள் மேற்கொள்ள நமக்கு நாமே திட்டத்தின் கீழ் 8 தனியார் நிறு வனங்கள் 49 லட்சம் ரூபாய் நிதி வழங்கி யுள்ளன. கோயம்பேடு நெடுஞ்சாலை மேம்பாலத்திற்கு கீழ் உள்ள பகுதியில் 82 லட்சம் மதிப்பில் மரங்கள், செடிகள், புல்தரைகள் மற்றும் செயற்கை நீரூற்றுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்தகைய பணிகளில் ஈடுபட தனியார், தொண்டு நிறுவனங்கள் முன்வர வேண்டுமென்று மாநகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.