சென்னை, மார்ச் 13- மெட்ரோ ரயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இம்மாதம் இறுதி வரை பயணிகள் இலவசமாக தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவையை 2015-ம் ஆண்டு முதல் தொடங்கப்பட்டது. மெட்ரோ ரயில் சேவை தொடங்கி 7 ஆண்டுகள் ஆன நிலையில், பல்வேறு வழித்தடங்களில் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2021-ம் ஆண்டு சென்னை மெட்ரோ ரயில் மூலம் விரிவாக்கம் திட்டம் தொடங்கி 54.41 கி.மீ தூரம் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை திருவொற்றியூர் - விம்கோ நகர் இடையே ஞாயிறு முதல் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் பணிகள் நிறைவு பெற்றதால் இன்று முதல் மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயிலில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் இம்மாதம் இறுதி வரை பயணிகள் இலவசமாக தங்களின் வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறப்பட்டுள்ளது.